எனது ஈழக் கனவு தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். புரட்சி வெடிக்கும் முகத்தில் – துளிப் புன்னகை மலர வேண்டும். வெறியாட்டம் கண்ட கண்கள் – இனி வாண வேடிக்கைகள் காண வேண்டும். சயனைடு எடுத்தக் கைகள் – இனிச் சாகுபடி செய்ய வேண்டுமே தவிரச் சாகும்படிச் செய்யக்கூடாது. சாவுகளைக் கண்ட மனிதர்கள் – மனச் சாந்தத்தோடு வாழ வேண்டும். ஆயுதம் ஏந்தி நடந்த கால்கள் – கடவுள் ஆலயம் நோக்கி நடக்க வேண்டும். வெடிகுண்டு ஏந்திய கைகள் – தமிழ் வெண்பாட்கள் இயற்ற வேண்டும். குண்டு விழுந்த கானகங்களில் – குயிலின் கானம் கேட்க வேண்டும். ஈழத்திற்காக உயிர்த் துறந்தவர்களை – எந்நாளும் தமிழினம் போற்றிப் பாட வேண்டும். மனிதர்களை வதைத்தவர் நெஞ்சில் – இனியாவது மனிதம் மலர வேண்டும். தனித் தமிழீழம் வேண்டும் – அதில் தமிழினம் மட்டுமே வாழ வேண்டும். |
பின்னூட்டமொன்றை இடுக