முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா? -ரசிகன்பாலு |
முத்தமிடக்கூடாதா
15 ஜனநல்ல நண்பர்கள்
15 ஜன
இவ்வளவு கிட்ட வந்தபின்னும் தூரமாய் நிக்கிறாயே பார்க்கிறவர்கள் தப்பா நினைக்க போறாங்க நாம் நல்ல நண்பர்கள் என்று -யாழ்_அகத்தியன் |
அரங்கேறிய கணங்கள்
15 ஜன
கனவில் கைகோர்த்த எந்தலை வலிக்காக நீயும் தோல்விகளுக்கான பறிமாறலாய் |
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் முதல் நாளின் அடுத்த நாளின் உறங்குவதேயில்லை. ரசிகன்பாலு |
உன் கண்கள்தான்
15 ஜனஉனக்கு முத்தம்
கொடுக்க சொல்லி உன் கண்கள்தான் கொடுக்கும் போதும் எதோ சொல்கிறதே -யாழ்_அகத்தியன் |
கோபத்தோடு
14 ஜன
தயவு செய்து கோபத்தோடு எனை விட்டு பிரியாதே ஏனெனில் நம்முள் உண்டான கோபத்தை கூட நான் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை -யாழ்_அகத்தியன் |
நீ பேசுகையில்
14 ஜன
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்! ரசிகன்பாலு |
வார்த்தைகளின்றி
14 ஜனமீன்விழிப்பார்வையிலே மான் துள்ளல் போடுமென் மனமதை மயக்கும் புன்னகையால் மட்டுறுத்தி விடுகிறாள்! இவளை வர்ணிக்கவே வார்த்தைகளின்றி வறண்டு போகிறதென் செந்தமிழ்! |